1
இரட்டைக்கோலம்
வாசலில்தான்
கோலம் போடவந்தாள்!
ஆனால்
அவளையும் அறியாமல்
அவன் மனதிலும்
காதலெனும் கோலம் போட்டுவிட்டாள்!
2
அவனது நாட்காட்டி
அவளின் முகத்தைப்
பார்க்கும்போதெல்லாம்
அவனது நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள்!
3
அகன்ற கண்ணாடி
வானமங்கை
முகம் பார்க்கும்
அகன்ற கண்ணாடி
நீலக்கடல்.
த.ஹேமாவதி
கோளூர்