Header Ads Widget

Responsive Advertisement

கார்த்திகை தீபம்

பிரம்மா விஷ்ணுவின்

தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டியை முடிவுக்கு கொண்டு வரவும்


அவர்களின் செருக்கை அழிக்கவும் அக்னி வடிவாய் தோன்றினார் சிவபெருமான்

என் அடியும் முடியும் அறிபவரே பெரியவர் என்றுரைத்தார்


இருவராலும் அதனை காண முடியாது தோற்றனர்


சிவனை விட பெரியது உலகில் வேறொன்றும் இல்லை என்பதை உணர்த்தவும் தோன்றிய நாளே திருக்கார்த்திகை தீபம்


சிவனுக்கு நாமும் விரதமிருந்து

தம்முள் இருக்கும் செருக்கை அழித்து

தீபம் ஏற்றி அதன் சுடரைப் போல நாம் மற்றவருக்கு வெளிச்சம் தந்து உதவி செய்வோம்


அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்


தி.பத்மாசினி