மழையென்ற போர்க்களத்தில்
புயலென்ற பகைவனுடன் வெகுண்டு போர்புரிந்து வீரமரணமடைந்த
தென்னைகள் தங்கள் சோகத்தையும் மறந்து இன்று
தங்களின் வீரமரணத்தால்
இதயம் உடைந்த
தங்களின் விவசாயி
தற்கொலையால்
உயிர்மாண்ட சேதிகேட்டு
தங்கள் அழிவையும்
மறந்து கூடிஅழுதன!
எங்களை வளர்த்த தந்தையே அவசரப்பட்டு விட்டாயே! நாங்கள் நின்றிருந்த இடந்தனிலே மீண்டும் எங்களின்
கன்றுகளை நட்டால் வளர்வோமே!ஓங்கி நிற்போமே!, குலைதள்ளி பயன்தருவோமே!
ஆனால் மனம்சாய்ந்துப் போனாயே!
உயிர்பிரிந்து உடலை மண்ணின்மேல் சாய்த்தாயே!
எங்களையும் அழவைத்துவிட்டாயே!
த.ஹேமாவதி
கோளூர்