தன்னையே அழித்து
ஒளிதரும் மெழுகுவர்த்திகள்
புகழ் பாமாலைகள்
கேட்டதென அறிந்தீரோ?
தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தந்த
தென்னையும் , தன்னை புகழ
கேட்டதாய் நடைமைறையில்
கண்டதுண்டோ?
வாழைமரம் பலன்தந்து
ஆயுள் முடிகையில் —தன்
கன்றினை அடுத்த நிலயில்...
பலன்தர விட்டுச்சென்றதே
எந்த மகுடம் வருமென்றோ....?
இசையால் உலகை மகிழ்விக்கும் எந்த குயிலும்
ஏதோ ஒரு விருது வருமென்ற
எதிர்ப்பார்ப்பிலா கூவுகிறது?
மலைமுடி தொட்டு தடவி,
மலையடி தொடும் அருவி,
ஆறென ஓடி வளம்தந்தே
ஆழ்கடலில் கலக்கின்றதே....
பதிலுக்கு எதை எதிர்ப்பார்த்தது?
பாகுபாடின்றி வானம் திறந்து
மழைபொழிவிக்கும் மேகம்.....
சிலை வைப்பார் தனக்கும்
என்று எதிர்ப்பார்த்தால்......
ஈடாக எதைத்தருவோம்?
பிரதிபலன் எதிர்ப்பார்த்தே....
பணியினை ஆற்றும் மானிடரே!
கீதைசொல் மறந்தீரோ?
பாதைமாறிப் போவீரோ?
நரகம் போக பாதையை
நலமெனக் காண்பீரோ!
🌹🌹வத்சலா🌹🌹