Header Ads Widget

Responsive Advertisement

ஆடுகிறாள் காவிரி!



பிறந்தவீட்டை விட்டுவிட்டு
புகுந்தவீட்டில்
வாழ்வதற்கு
பெருகியோடும்
பிரியத்துடன்
ஆடுகிறாள் காவிரி!
ஆடியிலே இவள்
புதுப்பெண்ணாவாள்!
புதுமணத் தம்பதிகள் ஆடியிலே பிரிந்திருக்க காவரியோ கரைகாண ஆசையோடு கண்ணான கணவனாம்
கடலழகனைக் கூடிடவே 
காற்றை சலங்கைகளாய்க்
கட்டிக்கொண்டு
கணவனைக் காண்பதால்
மேனியெங்கும்
நெளிந்தோடும்
நாணத்தைப் பிறரறியாவண்ணம்
இருமருங்கும் நின்றிருக்கும்
அண்ணன்மாராம்
மரஞ்செடிகொடிகள்
அன்போடு சீரெனத்
தந்த வண்ணமலர்ச்
சேலைக்குள் மறைத்தே
தந்தன தந்தன என
தாளம்பாடி வருகிறாள் காவிரி!
ஆடிப் பதினெட்டில்
சுபமுகூர்த்தவேளை
நாடி வருகின்ற அவளை வரவேற்க
ஒளிரும்  தீபமேந்தி
மணக்கும் மலர்தூவி
பெண்கள் காத்திருக்க!புத்தம்புது தம்பதியர் இனிக்கும் தம்இல்லறத்தில்
இவள்துணைநாடி
வரவேற்க
தகிடதகிடப் பொங்கிப் பெருகிட
திமிதிமியென்று
சிலிர்த்துப் பெருகிட
ஆடிக்கொண்டே
ஓடிவருகிறாள் காவிரி!
நன்மைகள் கோடி
நமக்கு தந்தபடி!

*த.ஹேமாவதி*
*கோளூர்*