உறவுகள் மேகம் போல
கூடும் பிரியும் பலநேரம்!
ஆனால்.....
நட்பு என்பது வானம்போல
விரிந்து பரந்திருக்கும்
எந்நாளும்!— எனும்
தத்துவத்தை எனக்கு
கற்றுத்தந்தது நட்பே!
வலிகளெல்லாம்
நீர்க்குமிழியாய்
உடைந்தே போயுள்ளது
என்னுடன் நீ இருக்கையிலே....!
ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் ஒளிர்ந்தாலும்
இரவுக்கு அழகு என்பது
ஒற்றை நிலவால் தானே
நிதர்சனமாகிறது?
ஆயிரம் உறவுகள் எனை
சூழ்ந்திருந்தபோதும்
நட்பு மட்டும் நானே
என் பாதைக்கு தீபமானது?
உறவுகளின் அன்பின்
அளவுகோலாய் நிற்பது
அனேக நேரங்களில்
பணம் மட்டுமே...!
நிரந்த அன்புக்கு
திறவுகோல் என்பது
நட்பு அன்றி வேறேது?
நட்பில் துரோகம் என்பது
கொடூரமானது!
பரிகாரங்கள் எல்லாம்
பரிகாசங்கள் செய்யும்....
தீர்வு இல்லையென்றே வையும்!
சண்டையிட்டு நண்பர்
பிரிந்து சென்றிடினும் ....
ஒருவர் ரகசியத்தை
மற்றவர் உயிராய் காப்பது....
நட்பின் நெறி தவறாமையை
காட்டுகிறது —- ஏனெனில்
நட்புக்கும் கற்பு உண்டு!
பணம் சம்பாதிக்க வழிகள்
பலவகை உண்டு—ஆனால்
நட்பை சம்பாதிக்க புன்னகையென்ற
ஓர்வழி மட்டுமே உண்டு!
தவறுகளை ஆமோதித்த
நேரங்கள் மிக அரிது!
தட்டிக்கேட்டு திருத்திய
நேரங்களே மிகப்பெரிது!
நட்பில் சண்டைகள்
வலித்ததை விடவும்
நட்பில் மௌனங்கள் தந்த
வலிகளே ஏராளம்!
உலகத்தில் மரணங்கள்
ஏராளம் ஏராளம்- நட்பின்
சாகாவரம் என்றும் தாராளம்!
🌹🌹வத்சலா🌹🌹