மூக்குத்தி அழகினில நிலவொளியும் கூசுதடி
இரகசியம் என்னதுன்னு மறஞ்சுநின்னு பாக்குதடி
மேடுபள்ளம் நிலவிலயும் நிறையத்தான் இருக்குதடி
உம்முகத்தப் பாக்கையில அதுயெல்லாம் தோக்குதடி.
பத்துமாசம் சொமந்துன்னப் பெத்தவளும் கண்ணுவச்சா
பாத்துப்பாத்து ஏங்கிநிற்கும் நானென்ன மிச்சமடி
பத்துவீடு உள்ளவனும் உம்முன்னே ஏழையடி
பாத்தாலே பசியாறும் உம்முகத்தின் சக்தியடி.
என்மதிய மழுங்கடிச்சு நிம்மதியக் குலையவச்சு
வெண்மதியத் தோக்கவச்ச மூக்குத்தி மூக்கழகி
சித்தநேரம் என்னருகே சிரிச்சுப்பேசி நீயிருந்து
சித்தம் தெளியவச்சு அப்புறமாப் போதாயி.
அற்புதமே வா தாயி.
*கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*