எந்த நாடும் எந்தன் சொந்த நாட்டிற்கு ஈடு இல்லை
பார் வியந்த பாரதம் போல் வேறுநாடு பாரிலில்லை
இயற்கை வளம், செயற்கை வளம் எதிலுமே குறைச்சலில்லை
மனிதவளம், அறிவுவளம் நிறைந்த நாடு வேறு இல்லை.
நட்பு என்றும் உதவி என்றும் வந்தவரை விட்டதில்லை
பகையோடு பார்ப்பவர்கள் கண்பறிக்க பயமுமில்லை
போதிமர புத்தன் வழி செல்வதற்கும் தயக்கமில்லை
மோதிப்பார்க்க வந்தவர்கள் மோகம் வெல்ல விட்டதில்லை.
வேற்றுமைகள் உண்டு இங்கே சொல்வதற்குத் தயக்கமில்லை
வேண்டும் நேரம் ஒன்றுபட்டு பகைவிரட்டத் தவறவில்லை
வந்தே மாதரம் என்று ஓங்கி ஒலிப்பதற்கு
தடைபோட்ட நாட்களிலும் ஒலிக்காமல் விட்டதில்லை.
அண்டைநாடுகள் அனைத்தும் சண்டை நாடாய் மாறினாலும்
சந்து பொந்துக்குள் நுழைந்து தொந்தரவாய்த் தந்தாலும்
வந்தேமாதரம் என்றொலிக்கும் கோஷம் போதும்
ஒன்றுபட்ட இந்தியாவை சக்தியூட்ட அது போதும்
சக்தி காட்ட அது போதும்.
*அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்
🇮🇳 கிராத்தூரான்🇮🇳