Header Ads Widget

Responsive Advertisement

ஆறுவது சினம்*.



முரண்பாடுகள் சமன்
செய்யப்படாதத்
தருணங்களில் .......
புலன்களின் அடக்குமுறைகளைத்
தகர்த்தெறிந்து வெடிக்கும்
எரிமலையே சினம்!

கண்களை மூடிய வண்ணம்
அறிவின் வேலைநிறுத்ததோடு....!
போர்க்கொடி பிடித்தபடி
புலன்களின் சாலைகளில்
ஊர்வலம் போகும் 
உணர்ச்சிகளின் கொந்தளிப்பு!

எப்போதாவது வந்து போகும்
அல்லது..........
எப்போதும் வந்துவிடும்
உறவுகளைப்போல்
எல்லோருக்குள்ளும் 
மறைந்தே வாழ்ந்திடினும்.....!
வெளிப்படும் வேளை பலர்மனம்
துடித்துப்போவதைத்
தடுக்க இயலாத சாக்காடு!

சந்தர்பங்களின் துணையோடு.....
சந்தோசங்களின் இணைப்பை
துண்டித்துப் பார்க்கும்
வெட்டுக்கத்தியாய் இந்த சினம்....
மழுங்க வேண்டிய தருணத்தில்
அதிமழுங்கியும்......!
வெடிக்கவேண்டிய தருணத்தில்
வெடிக்கவுமாய் இருந்தாலே....
அதற்கென்று உள்ள 
பெருமை நிலைக்கும்!
ஏனெனில்......
*செல்லிடத்துக்காப்பான்
                சினங்காப்பான்
அல்லிடத்து காக்கின் என்?
             காவாக்கால் என்*? 
🌹🌹வத்சலா🌹🌹