Header Ads Widget

Responsive Advertisement

மஞ்சள் நாள் நல்வாழ்த்துகள்!




மஞ்சளின் மகத்துவத்தை
மண்ணில் வாழும்
மனிதர்களுக்கு
மறுமலர்ச்சியூட்டும்
மலராக
மலர்ந்தமுகமாக
மறையாக
மகசம்பெறும்விதமாக
மஞ்சளின் குணத்தை பதமாக
மகளிர்க்கு மட்டுமல்ல
மனதை மயக்கும் 
மகாநதியின் அழகாக
 மங்கல நிகழ்ச்சியின்
 மங்கலமொழிபாடும் அனைவருக்கும்
மலிவான பொருளல்ல என்பதை
மலர்ந்த நினைவுகளாக்கும் நாள்!

மகிழ்வுக்கு அச்சாணியாக
மகினத்தையே ஆண்ட
மன்னர் பரம்பரையாகட்டும்
மகேசுவரியமே தேவையென
மக்கினத்தையும் விட்டொளித்து
மரகதத்திலே மாலைதொடுத்தவர்களாகட்டும்
மஞ்சளுக்கு மரியாதை தந்ததை
மனதில்கொண்ட நாளே!

மல்லிகைப்பூவின் மணத்திற்கு
மயங்காதவர் எவருமில்லை
மங்களம் பாடும் நிகழ்விற்கு
மறுப்பு தெரிவிப்பவர் மனிதரி்ல்லை!
மஞ்சட்பூச்சுக்கு மகத்துவமுண்டு
மறுதலிக்க மனமுள்ளவர் மனநோய்படைத்த மலிவான குணமுள்ளவர்!

மணப்பெண்ணுக்கு 
மணவறையின் கதாநாயகர்!
மணவறைத்தோழர் முதல்
மணப்பந்தல் முடிய
மயக்கும் பண்பான வித்தகர்!
மணவாளன் விரல்தொட்டு
மணவாளியின் நெற்றியிலிட்டு
மணவோலையின் மூலையிலும்
மஞ்சள் சிட்டாய் பட்டு!

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென

மஞ்சள்வானம் குடைப்பிடிக்க
குடைவரைக்கோயிலில் 
குமிண்சிரிப்பாய் தமிழே
சிற்பமென

ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1