Header Ads Widget

Responsive Advertisement

அன்னையே!



உயிர்த் தந்து
உருத் தந்து
உலகைக் காட்டி
உவகை ஊட்டியவள் நீ!

உற்றவனையும்
பெற்றவனையும்
உலகு போற்றிட
உயர்த்திய உத்தமி நீ!

ஆன்றோனுக்கும்
சான்றோனுக்கும்
அறிஞனுக்கும்
அரிச்சுவடி நீ!

விதையில்
விருட்சம் போல
மானிடத் துளியில்
மாக்கடல் நீ!

ஆணில் பாதியென்ற
அகந்தை
அழித்தவளல்ல
அவனியே நீ!

ஆணையும்
பெண்ணையும்
அகத்தே கொண்ட
பேரண்டம் நீ!

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

தோழமையுடன்...
*🙏🏻த.தாஸ்🙏🏻*