Header Ads Widget

Responsive Advertisement

போராட்டம்


மனிதா........!
நித்திரையின் போது வரும்
இன்பங்களும் துன்பங்களும்
நீ கண்விழித்தவுடன்
கலைந்து விடும்!
உன்னைக் காயப்படுத்தியவரை
நீ மன்னித்து விடு-ஆனால்
காயங்களின் தழும்புகளை
தவறியும் மறந்துவிடாதே!
இறந்தகாலத்தை நினைத்தே!
நிகழ்காலத்தை வெம்பவிடாதே!
எதிர்காலத்தைக் காண
உன் சாம்பல் கூட மிஞ்சாதே!
முள் நிறைந்த செடியில்தான்
அழகிய ரோஜா பூக்கிறது!
உன்னைச் சுற்றியிருப்போர்
உறுத்தும் முட்களாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்....!
நீ மட்டும் அவர் நடுவே
நிர்மலப்பூவாய் முகம் மலர்த்தி...
அகத்தில் போராட்டத்தை
ஆகுதியாக்க வேள்விச்சாலை 
அமைத்து பொறுமையாய்க்
காத்துக்கொண்டிரு.....
உலகமே உன்னை ஏற்றும்!
விடாமுயற்சியின் 
மறுவுருவம் நீயென போற்றும்! 
எதிர்காலம் உன்காலடி தேடும்!

வத்சலா