Header Ads Widget

Responsive Advertisement

எதற்காக.....


ஆறடி மண்ணோ ?
அக்னி சாம்பலோ ?
அதுமின்றி
பேரிடர் குழியோ?
பெருமழை நீரோ?
கணித்துச் சொல்லா
மரண வழியை.
தேடி வாழும்
மாந்தர் நாமே.

இறுகப் பிடிக்கிறோம்,
சுயநலப் பற்றை.
காற்றில் எறிகிறோம்,
நாமெனும் முத்தை .


அணிகள் சேர்கிறோம்,
இம்சைகள் செய்ய .
தனியாய் செய்கிறோம்,
நன்மைகள் நாமே .....

குற்றம் தேடிச்செல்வதனால் .
சுற்றம்
நாடிவருதில்லை .
என்னால் எல்லா மென்பவரால்,
எதுவுமிங்கே கூடவில்லை .....

புத்தன் போலேயிருப்பதானால் ,
பித்தாய்ப்போகுது மனங்கலிங்கே,
கேலிசெய்ய முன்னிருக்கை ,
சோலி 
செய்யப்பின்னிருக்கை.....

உங்கள் மெளனப்போர்களில்,
எங்கள்
எதிர்காலங்களை
கொன்று, 
மென்று ,
தின்று 
விடாதிர்கள் .....

எதற்காக ஓடுகிறோம்,
எதற்காக கூடுகிறோம்,
எதிர்காலங்களை மாற்றுங்கள்,
எதிரிகளையும்  மாற்றுங்கள்
நண்பர்களாக.....

*கவிஞர் ராஜா ஆ*
*பண்ணுருட்டி*