Header Ads Widget

Responsive Advertisement

வயல்



வயலும் வாழ்வு என்றே தான் மனிதன் வாழ்ந்தது,,,
அம்மையப்பன் தவிர வேறு என்ன கண்டது,,,
கூடிய மட்டும் ஒற்றுமையில் தான் கொள்கை பிறந்தது,,,
கோவில் குளமும் கட்டியதில் வாழ்க்கை வாழ்ந்தது,,,,

மன்னன் என்பவன் பஞ்சத்தைக் கண்டால் அஞ்சி நிற்பானாம்,,,
மக்கள் உடலை தன்னுயிராய் மதித்து நடப்பானாம்,,,
ஜனகன் மன்னன் உழுகையிலே வயிலில் கண்டானாம்,,,
அவளை,
சீதை என்று பெயரும் வைத்து தன் மகளாய் வளர்த்தானாம்,,,

வயலில் விளைந்த கலைமகளாய் வாழ்க்கைப்பட்டாளம்,,,
வந்த,
கலைமகளும்  விதியால் மீண்டும் 
காடு சென்றாளாம்,,,
மானைப் பார்த்து ராமனை அங்கு பிரிந்து கொண்டாளம்,,, 
நல்ல நிலையில் இல்லா சோகத்திலே சோர்ந்து 
போனாளாம்,,,

தேடிய ராமன் சீதையை அங்கு பார்த்துக் 
கேட்டானாம்,,,
"நல்ல குலத்தில் நீயும் பிறந்தால் என் பின்னால் 
என்றானாம்,,,
நிலத்தில் தானே நீயும் என்று கேலி செய்தானாம்!
அரவம், 
நஞ்சை கொட்டுவது போல் கொட்டி விட்டானாம்,
பாவம், சீதையுமே
வயலைப் பார்த்த முகிலைப் போல் கண்ணீர் விட்டாளாம்!

பாலா,,,