Header Ads Widget

Responsive Advertisement

பள்ளிக்கூடம்


சாதி மத பேதமின்றி

மத நல்லிணக்கம் இங்கே ஆரம்பமாகிறது

ஏழையென்றும் பணக்காரனென்றும் பேதமின்றி ஒன்று கூடி நட்போடு நாளும் உறவாடும் கூடம் அது தான் பள்ளிக்கூடம்


மனதின் இருளைப் போக்க ஆன்மீககூடம் 


அறியாமை என்னும்இருளை அகற்ற பள்ளிக்கூடம்


எண்ணையும் எழுத்தையும் கற்பித்து

வாழ்வில் ஏற்றம் பெறத் தூண்டுவதும்

கல்வியென்னும் ஞானக்கண்ணை அளிப்பதும் பள்ளிக்கூடம்


 குதூகலத்திற்கும்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கும்

தன்னைத்தானே அறிந்து கொள்ளவும்

சமூகத்தில் பழகும் போக்கையும் கற்பிப்பதும் பள்ளிக்கூடம்


பள்ளியில்லை ஊரும்

ஆறில்லா ஊரும் நாறும்


பள்ளியைப் போற்றி 

படிப்பை ஏற்றி

படிப்பினையை கற்போம்



தி.பத்மாசினி சுந்தரராமன்