ஆற மறுக்கிறது நெஞ்சம் ...
அணைய மறுக்கிறது ..
அது கொண்ட தீ ..
பிஞ்சுக்குழந்தைகள்.. கயவர் கைகளில் ..
அகப்பட்டு அழிந்திடும் நிலைமைகள் காண்கையில் ....
எங்கே தவறு ?
எது தவறு ?
நம் உறவினர் இவர் என்று நினைப்பது தவறா?
நம் அண்டை வீட்டினர் என்றே ..
நம்புவது பெரும் தவறா?
இதற்கொரு தீர்வு என்ன?
இதற்கொரு தீர்வு என்ன?
எது செய்ய வேண்டும் நாம்? ..எது செய்ய வேண்டும் நாம் .?
இப்படி ஒரு குழந்தை இனியும் மடியலாமோ....?
இப்படி ஒரு தவறு.. இனியும் நடக்கலாமோ ?
மனம் பதைத்து நினைத்து துடிக்கின்றதே ...
மனம் மறக்கவும் மறக்கவும் .. மறுக்கின்றதே ...
தெய்வானை,
மீஞ்சூர்.