Header Ads Widget

Responsive Advertisement

தூறிவிட்டுபோ

விதைகளெல்லாம்
கதை சொல்ல
ஆரம்பித்தன
விதைப்பவன் வீட்டில்
வெறும் விளையாட்டு
பொருளாய்
தன்வினை செய்ய
விண்முனை எதிர்ப்பார்க்கும்
விதைகளுக்கு தூவிவிடும் தூறலாவது தூவிவிட்டுபோ
சோர்ந்து கிடக்கும் விதைகளை 
கை சேர்த்து அள்ளி
விதைகளுக்கு வாழ்வளிக்கும் 
விவசாயிக்காக
கொஞ்சம்
தூறலாவது தூறிவிட்டுபோ..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..