Header Ads Widget

Responsive Advertisement

வெள்ளை தேவதை



யார் யாரோ சொன்னாக நானும் நம்பல,,,
வேறாளு என்றே தான் நானும் பார்த்தது,,,,
உனக்குள்ளே 
பத்திரமா? இருந்தது ,
நானும் 
உத்திரமா?
தெரியாமல் போனதே,,,
தெரியாதே
சத்தியமா,,,

வாய் விட்டு சொன்னாலே வந்திடுவேன் 
நான் தானே,,,
தாய் மாமன் மகளென்று சொன்னாலென்ன குற்றமா?
கெளரவத்தில் 
நீ வாழ,,,,
வறுமையிலே 
நான் வாட
சொந்தங்கள் 
மாறி
போனதே
கெளரவம், சொர்க்கத்தை 
தேடி ஓடுதே,,,

நீ சென்ற பாதையில் ,
நடந்து 
நான் 
பார்க்கிறேன்,
உன் 
காலடிச்சுவடு
வைரமாய் 
ஆனதே,,,
தள்ளியே 
நின்று நானும் காணவே,
வறுமையிங்கு காரணம் 
ஆனதே,,,

இந்த நிலை எனக்கு நீயும் தந்ததோ?
எந்த நாள் பார்ப்பேன் இனியும் 
வெள்ளை தேவயை,,, 
நீ,
வந்த நாள் 
முதலும் 
எனக்கும் 
இது போல் எண்ணத் தோணலையே,,,

ஈரேழு ஜென்மம் எல்லாம்
நீயே வேண்டும்,,,
இருபத்தேழு நட்சத்திரமும் சேர்ந்தே வேண்டும்,,,
யார் என்ன சொன்னால் 
என்ன?
நீ 
இங்கு 
வருவாய் 
கண்ணே,,,
புவியேழும் பூத்தவளாய் நிற்பாய் 
கண் முன், வெள்ளைத்
தேவதையாய்
என்றும் 
என் முன்,,,,

பாலா