Header Ads Widget

Responsive Advertisement

பெண்கள், ஆண்களின் கண்கள்



வலமோ
இடமோ
தெரியாது,
அவளின்றி எவர்க்கும் வாழ்வேது,,,
பெற்றது
மற்றுமல்லாது
கற்றதும்
அவளால்
தானே,,,!

உத்திரம் போல் குடும்பத்திலே
உபத்திரமில்லா வழியினிலே,
நித்திரை கூட தினம் மறந்து,
நீல வான் வெண்ணிலவாய்,,,

பத்திரமாக பார்த்திருந்தால் சித்திரம் போல வளிருப்பாள்,
பெற்றவரை உயர்த்தி வைத்து பெருமைதனை கூட்டிடுவாள்,,,,

உலகத்தை காண வைத்த உத்தமியாய் அவளிருக்க, எத்தனையோ அதிசயங்கள்
கண் முன்னே வந்தாலும்,

எட்டாம் அதிசயம் என எதை எதையோ சொன்னாலும்
உள்ளத்தில் உறவாடும் - என்
உயிரே போனாலும்,

கள்ளமில்லா சொல்லேற்றி
என்னை கடுங்காவல் புரிந்தாலும்
உள்ளத்தில் 
நீ இருப்பாய்
என்றும்
உயிர்
கொடுத்த அதிசயமாய்!

பாலா