"""""" """""" """"""""
இறப்பு ஒரு இறப்பல்ல
நிரந்தர. இடமாற்றத்தின்
இறுதி கட்ட பயணம் ..
இறப்பு
ஒரு இழப்பல்ல
உருபெற்ற இடத்திற்க்கே
உடை பட்டு செல்கிறது...
மீண்டும் உருபெற.,.!
மண்ணை
மண்ணோடு கலந்து
மரு சுழற்சி
செயல்முறை..
இந்த உலகம்
மிகப் பெறிய
சந்திப்பு நிலையம்..
உயிர்களின்
போக்கு வரத்து
இங்குதான் சரியாக
சரி செய்யப் படுகிறது,.
வாழ்ந்த போது
பயணித்த
பயணச்சீட்டுக்கு
இங்குதான் இருதியாக
பரிசோதிக்கப் படுகிறது...
கொலையா..
தற்கொலையா..
கொள்ளையா.. அடுத்தவனை
ஏமாற்றினாயா...?
இறைவனை மறந்து...
இன்பமாய் இருந்தாயா..?
வாழும் போது
மீறிய விதிமுறைக்கு
கட்டாய தண்டனை
கைமேல் பலன்..
தப்பிக்க முடியாது..
தயவு தாட்சன்யம் கிடையாது..
ஏன் தெரியுமா...? உன்
கட்டுப்பாட்டு அதிகாரி..
இறைவனாய் இருப்பதால்...!
அப்துல் முத்தலிப்
நெய்வேலி..