Header Ads Widget

Responsive Advertisement

வீடு


ஓடி உழைத்தவர் வாடிக் களைத்தபின் நாடிச்செல்லும் இடம் வீடு.


பெண்டு பிள்ளையுடன் உண்டு மகிழவும் 

கண்டு களிக்கவும் வீடு.


மூத்தோர் இருந்திடில் முத்தான வாழ்க்கையை தப்பாமல் அளித்திடும் வீடு.


கூட்டாக அனைவரும் கூடி மகிழ்ந்திடில் கோவிலாகும் அந்த வீடு.


எலிவளை என்றாலும் தனிவளை என்றால் 

அதிசுகம் அளிப்பது வீடு.


எல்லையில்லா இன்பம் என்றும் அளித்திடும் பல்கலை தான் நல்லவீடு.


கோபமும் தாபமும் இன்பமும் துன்பமும் 

கூடிநிற்கும் இடம் வீடு.


குற்றம் மறந்திடில் சுற்றம் தழைத்திடும் 

பூந்தோட்டம் தான் நல்லவீடு.


நினைவுகள் பலதையும் நினைவுபடுத்தியே நிற்பது தான் பலர் வீடு.


கனவுகள் கண்டதை நனவாக்கிப் பார்த்திட 

பணமாக மாறிடும் வீடு.


பலர் கனவாக இன்றும் வீடு.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*