வாழ்த்தப்படுபவன், போற்றப்படுபவன், புகழப்படுபவன்,
எத்தனை அர்த்தங்கள்,
அத்தனையும் சத்தியங்கள்.
தெரிந்து தான் வைத்தார்களா உனக்கு இந்தப் பெயரை?
புரிந்து தான் வைத்தார்களா உனக்கு இந்தப் பெயரை?
கொடூரமான படையின் நடுவிலே கூட
அடி பணியாத வீரம்.
எதிரியிடம் சிக்கியது தெரிந்தும் கூட
துணிந்து பேசும் தீரம்.
சித்திரவதையின் இடையிலே கூட
நெஞ்சு நிமிர்த்தும் தைரியம்.
மாவீரன் பகத்சிங்கை பார்க்கிறேன் உன் வாக்கினில்,
வீரபாண்டிய கட்டபொம்மனை நினைக்கிறேன் இந்த வேளையில்,
அஞ்சாநெஞ்சன் வாஞ்சியை காண்கிறேன் உன் கண்களில்.
மீண்டுவா எங்கள் வீரமே,
மீண்டும் வா எங்கள் தீரனே
காத்திருக்கிறது தேசம் உனக்காக,
வேண்டிநிற்கிறது தேசம் உனக்காக.
அஞ்சாத நெஞ்சனைப் பார்க்காத வரையில் துஞ்சாது எங்கள் நெஞ்சம்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*