💐💐💐💐💐💐💐💐
மாசிலா மரியாளின்
மகோன்னத மகனாக
மாட்டுத் தொழுவத்தில்
பனித்த இரவினில்
பேரொளிச் சுடராக
இருள் அஞ்சியோட
பிறந்தாரே
கர்த்தர்
பிறந்தாரே
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்
நாம் கூடியே
துதி பாடியே
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
மானுடர் வாழ்ந்திட
புதுபாதை தந்திட
நன்மைகள் பெருகிட
எழில்மழலையாய்ப்
பிறந்தார்!
மனிதரை இரட்சிக்கும் நல்ல மேய்ப்பராய்த்
திகழ்ந்தார்!
சொல்லொணா வேதனை யாவையும் ஏற்று
புன்னகை பூத்தமுகமுடன்
அன்பால் மாந்தரை
அணைத்தார்!
நமக்காய் சிலுவையில் மாய்ந்திடவே
பெருமகனார்இயேசு
பிறந்தாரே!
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
நாம்
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
த.ஹேமாவதி
கோளூர்