உச்சி வெய்ய
உடல் கருக்க
வேர்வை வழி
இரத்தம் சிந்தி
மெச்சி என்னை
பள்ளிக்கு அனுப்பி
வச்சதெல்லாம்
நெஞ்சுக்குள்ள
ரண ரணமா
கணத்து கிடக்கு
வயக்காட்டு வேலை
தீந்துபோன நேரத்துல
பணக்காரன்
வாசக்கூட்டி நீ அள்ளுன
குப்பை மனசுக்குள்ள
கொட்டிக்கிடக்கு
உன் காலுல
செருப்பில்லாம
காடு காடா நீ அலஞ்சு
என் காலுக்கு செருப்பு
தந்த காலமெல்லாம்
நெருப்பாட்டம் எரியுது
இன்னும் என்
நெனப்புக்குள்ள
உன் கிழிஞ்ச சேலைய
கட்டிக்கிட்டு என்
சீருடைய பிழிஞ்சு
போட்ட நிகழ்வெல்லாம்
நிழற்படமா நிக்குது
என் கண்ணுக்குள்ள
என் சோடிங்க எல்லா
விளையாட
விடுமுறையில
என்னை வேலைக்கு
கூட்டிப்போயி எனக்கு
உன் முந்தானைல
முக்காடு போட்டு
என் நிரைக்கும் சேர்த்து
முழுசா நீ
களையெடுத்தயே
படிக்க வச்சு என்னாத்த
பண்ணப்போற
படிச்சுப்புட்டு பாரு நம்ம
செல்லாத்தா
மகனாட்டம்
கொள்ளப்பேரு
சுத்துறான்
ஏற்கெனவே சும்மா
சொன்னவங்க
கிட்டயெல்லாம்
சொன்னயே
என்புள்ள கலெக்டர்
ஆவான்னு அம்மா
நீ பட்ட எல்லாத்தையும்
நான் பாட்டுல எழுதினா
நாளும் போதாது
எழுதுகோலும்
போதாது
உன் ஆசை தீர்க்காத
பதறாதான்
போயிட்டேன்
பதறாத என் ஆத்தா
இத்தோட
நிறுத்திக்கிறேன்
இப்போ நான்
வாத்தியாரு
என்கிட்ட படிக்கிறவன்
ஆகட்டும்
எதிர்கால கலெக்டரு..