Header Ads Widget

Responsive Advertisement

திண்ணையின் சுகம் வருமா...!

அழகான குடிசை வீடு
திண்ணைதான்
நான் வசிக்கும்
இடம்..

மழை காலங்களில்
குடிசை வீட்டில்
கூரையில் ஒழுகும் நீர்த்துளி
விழும் அழகை ரசித்தப்படி
வாழ்க்கை நகர்ந்த
தருணம்..

மனதைக்
கொள்ளைக்
கொள்ளும்
அழகு..

திண்ணை
பல கதைகள்
சொல்லும்
எண்ணத்தை
அளவாக்கி
அழகாக்கி
அடக்கத்தை
உண்டாக்கிய
திண்ணை
மட்டும் மாறாமல்
இருந்த காலம்
மற்ற
எல்லாம்
மாறிய கோலம்..

நானும்
திண்ணையை
மறந்த
காலம்
திகட்டாத
அந்தக்காலம்
இனி வருமா
மகிழ்வான
அமைதியை
தருமா
வீடு பெரியதானாலும்
திண்ணையின்
சுகம் வருமா...!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..