யாழிசை கேட்டேன்
என்றாள் அவள்.
இல்லை இது
குழலோசை என்றான் அவன்.
மறுத்தவள் தொடர்ந்து
வீணையின் இசை
இதுவே என வாதிட்டாள்.
ஏற்காத அவனோ
வெள்ளிமணி ஓசை
என்றே அடம்பிடித்தான்.
மாறிமாறி இருவரும் வாதிட
முதன்முதல் தன்
மலர்வாய் திறந்து
அ..ம்..மா..!
என பேசிய அவர்களின் குழந்தையோ தன்குரல் கேட்டு
ஏன்இவ்வாறு பேசுகிறார்கள் எனத் திணறியது.
த.ஹேமாவதி
கோளூர்