காலை விடியல்....
சோம்பல்முறிக்கு
ம்
மங்கிய ஒளியை
சுமந்து நின்றதென் வீதி
வாசலைப் பார்த்து
விரிந்ததென் விழி
தரைமுழுக்கதங்க
பொட்டுக்கள் சிதறிக்கிடந்தன!!!
சிந்தனை விரித்து
அண்ணாந்து பார்
க்க
அழகாய் சிரித்தது
முருங்கை மரம்.!.
இரவு முழுவதும்
இளந்தென்றலின்
சீண்டலுக்கு உன்
சிணுங்கல்களும்...
தீவிர காற்றின்
தீண்டலுக்கு உன்
துவளுதலும் என
நீண்டிருந்த அன்பு போராட்டம்
விடிகின்றவரையி
ல்..
முடியாது முடிந்திட!
பொங்கிப்பெருகி
ய
உன்வியர்வைத்
துளிகள் தானோ உதிர்ந்துச்சிதறிய
பழுப்பு இலைகள்
தங்கப்பொட்டுக்க
ளாய்
தரை முழுவதும்???
வினாஎன்விழியி
ல்???
விடையோமழையி
ல்....
குளித்த முருங்கை
மர
மலர்ந்த அழகில்!!!
🌹வத்சலா🌹