Header Ads Widget

Responsive Advertisement

விதி ஒன்று தான் என்றும்!


சொன்னவள், பெற்றுவிட்டாள்

அங்கே

சுதந்திரம்,,,,


கேட்டவன்

பெறவில்லை

இதுதான்

அவள் தந்த

மந்திரம்,,,,


சொன்னவள்,

கடல் ஆழம், 

மழை உயரம் 

என்றாள்,,,


உலகமே என் அருகில் என்றே

சுற்றினேன்,,,


சொன்னவள்,

உலகம் சுற்றும்

வாலிபன்

என்றாள்,,,


என் உள்ளூர் 

பாதை தன்னை மறந்து விட்டேன்,,,


சொன்னவள்,

பாட்டு நீ,

பரதம் நான்

என்றாள்,,,


இரு கை 

தாளமிட

தவில் தேடினேன்,,,


சொன்னவள்,

நீ, முன்னின்றால்

முகம் பார்ப்பேன்

என்றாள்,,,,


நிலை ஆடியாய்

நின்று 

விட்டேன்,,,


சொன்னவள்,

அடுத்து

தலை ஆடி நமக்கு

என்றாள்,,,


விளையாடியே

பொழுதை

கழித்து விட்டேன்,,,


சொன்னவள்,

எல்லாம்

நீயே

என்றாள்,,,


இறுமாப்பில்

நானும்

இருந்து விட்டேன்,,,


சொன்னவள்,மன்னாதி 

மன்னன்

என்றாள்,,,,


மறுநாள்

சேவகனாய்

ஆகி விட்டேன்,,,


சொன்னவள்,

முதல் உண்மை

சொல்லி

விட்டாள்,,,


நீரின்,

மூன்று நிலையாய்

நின்று விட்டேன்,,,


சொன்னவள், இனியொரு விதி செய்வோம் என்றாள்,,,,


இறுதியில்

தெரிந்தேன்

முதலாம் விதிக்கு முற்றுப் புள்ளியென்று,,,,


சொன்னவள்,

பெற்றுவிட்டாள்

அங்கே 

சுதந்திரம்,,,,


கேட்டவன்

பெறவில்லை இதுதான் 

அவள் தந்த மந்திரம்,,,,,


பாலா,,,